தூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன?


குறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது காலகட்டத்தில், அது பண்டைத் தமிழ்நாட்டின் முத்து நகரமாக இருந்தது. நம் ஞாபகங்களின் நினைவடுக்குகளில் ஒரு தொன்மமாகப் பதிந்திருக்கும் அந்த முத்து நகரமானது, அரேபியர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று உலகளாவிய ஒரு பெரும் வாணிப பட்டாளத்துடனான உறவில் திளைத்திருந்தது. தூத்துக்குடிக்கு அந்தப் பக்கத்திலுள்ள காயல்பட்டினம் போன்ற பாரசீகக் கலாச்சாரத்தின் மிச்சங்கள் தங்கிய ஊரும், ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் எச்சங்கள் நிறைந்த ஊரும் பண்டை தூத்துக்குடியின் வாணிப மரபின் எல்லை கடந்த வேர்களுக்கான அத்தாட்சிகள்.

இரண்டாவது காலகட்டத்தில், அது இந்திய சுதந்திரப் போராட்டக் குரல்களை எதிரொலிக்கும் எழுச்சி மிக்க சுதேசி நகரமாக உருமாற முனைந்தது. இங்கிருந்து இலங்கைக்குக் கப்பல்களை இயக்கியது ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’. பிரிட்டிஷாரின் வியாபார ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சிதம்பரனாரின் ‘சுதேசி நாவாய் சங்கம்’ இங்குதான் பிறந்தது. அவருடைய ‘எஸ் எஸ் காலியோ’, ‘எஸ் எஸ் லாவோ’ கப்பல்கள் இங்கிருந்தே கொழும்புக்குப் புறப்பட்டன. தொழிற்சங்கம் எனும் சொல் சாமானியர்களின் புழக்கத்தில் வந்திராத நாட்டில் 1908-ல் பிரிட்டிஷாரின் ‘கோரல் நூற்பாலை’க்கு எதிராக ஊரே திரண்டு தொடர் வேலைநிறுத்தம் நடத்தி, தொழிலாளர் உரிமையை நிலைநாட்டிய நகரமும் இது. அந்தக் காலகட்டத்திய தூத்துக்குடியின் வாணிபச் செல்வாக்கை சொல்லும் சின்னங்கள் நகரின் பழைய துறைமுகம் பகுதியில் இந்தோ சார்சனிக் கட்டிடங்களாக நிற்கின்றன. கலாச்சாரப் பரிவர்த்தனைகளின் செழுமையை தூத்துக்குடிக்கு இந்தப் பக்கத்திலுள்ள மணப்பாடு கிராமத்துக்குச் சென்றால், தேவாலயங்கள், மாளிகை வீடுகள், ஸ்தூபிகளில் பார்க்கலாம்.

மூன்றாவது காலகட்டத்தில், இன்று அது பின்காலனிய யுகத்தின் தொழில் நிறுவனங்களுடைய வேட்டை நகரமாகி சிதைவை எதிர்கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய ஆட்சியாளர்கள் முன்னெடுத்த தொழில் கொள்கைக்கான பரிசோதனைக் களங்களில் ஒன்றாக தூத்துக்குடியையும் சொல்லலாம். அனல் மின் நிலையங்கள், தொழிற்பேட்டைகள், தனியார் – அரசு கூட்டுறவில் உருவாக்கப்பட்ட முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஸ்பிக்’, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கான முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஸ்டெர்லைட்’, உள்ளூரிலிருந்து சர்வதேசம் நோக்கி விரியும் ‘விவி மினரல்ஸ்’ என்று இந்திய அரசுக்கு சாத்தியப்பட்ட எல்லாத் தொழில் கற்பனை வகைமையிலும் தொழிற்சாலைகளை உள்வாங்கி அது நிற்கிறது.

இங்கு ஒரு கேள்வி. இன்று நாம் பார்க்கும் தூத்துக்குடிதான் ஒரு வாணிப நகரம் என்றால், முந்தைய இரு காலகட்டத்திய தூத்துக்குடியை என்ன பெயரிட்டு அழைப்பது?

ரஜினி அரசியலின் பேராபத்து


அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதன் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களைப் பற்றி அதில் ஒரு குறிப்பு இருந்தது. அவர்கள் ஏன் கைதுசெய்யப்பட்டார்கள்; எதற்காக இந்தக் கைதுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன என்ற விவரணை அதில் இல்லை. என்ன காரணமாக இருக்கும் என்று இணையத்தில் துழாவியபோது கிடைத்த செய்திகள் ஆச்சர்யமூட்டின.

ஃபிலெடெல்பியா நகரிலுள்ள ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடைக்கு 21 வயதான ராஷன் நெல்சன், டாண்டே ராபின்சன் இருவரும் செல்கின்றனர். இருவரும் கறுப்பர்கள். அங்கே அவர்களுடைய இன்னொரு நண்பர் ஆண்ட்ரூவுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த இளைஞர்களில் ஒருவர் கழிப்பறைக்குச் செல்ல முனையும்போது அனுமதி மறுக்கிறார் கடையின் மேலாளர் - வெள்ளையர். சாப்பிடுவதாக இருந்தால் அவர்கள் அங்கே இருக்கலாம் அல்லது உடனே வெளியேற வேண்டும் என்கிறார். பேச்சு போய்க்கொண்டிருக்கும்போதே போலீஸாரை அழைக்கிறார். போலீஸார் அங்கு வந்த வேகத்தில் இரு இளைஞர்களையும் கைதுசெய்து விலங்கு மாட்டுகிறார்கள். இதற்குள் அவர்கள் சந்திக்கவிருந்த நண்பர் – அவர் வெள்ளையர் - வந்து சேர்கிறார். இவையெல்லாமும் சில நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்துவிடுகின்றன.

அமெரிக்காவின் பெரும் சங்கிலி உணவகங்களில் ஒன்றும், உலகெங்கும் 27,500-க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்ட ‘ஸ்டார்பக்ஸ்’ விதிகளின்படி, சாப்பிட வருபவர்கள்தான் அதன் காபி கடைகளுக்கு வர வேண்டும் என்பதில்லை. சும்மா கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டிருந்தும் செல்லலாம். இந்த இளைஞர்கள் இருவரும் ஒரு வியாபாரப் பேச்சின் நிமித்தம் அங்கு வந்திருந்திருக்கிறார்கள். பேசிவிட்டுக் கலையலாம் என்றிருந்தார்களா அல்லது நண்பர் வந்ததும் சாப்பிடலாம் என்றிருந்தார்களா என்பது தெரியாது. அங்கு வழக்கமாகச் சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் என்பது பின்பு தெரியவந்திருக்கிறது. போலீஸார் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. வந்த வேகத்தில் அவர்கள் இளைஞர்களுக்கு விலங்கிட்டதை மெலிசா டிபினோ என்ற வெள்ளைப் பெண்மணி படம் எடுக்கிறார். தார்மிக உணர்வோடு அதைப் பகிர்கிறார்.

சமூக வலைதளங்களில் இந்தக் காணொலி பரவுகிறது. பார்ப்பவர்கள் கொந்தளிக்கிறார்கள். கறுப்பர் – வெள்ளையர் வரையறைகளைத் தாண்டி ‘ஸ்டார்பக்ஸ்’ கடைகளில் கூடி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். விளைவாக ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கெவின் ஜான்சன் மன்னிப்பு கேட்கிறார். “இனி கடைக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் கழிப்பறையைப் பயன் படுத்திக்கொள்ளலாம்” என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார். கூடவே, வரும் மே 29 அன்று அமெரிக்கா முழுவதுமுள்ள கடைகள் மூடப்பட்டு, நிறபேதம் உட்பட எந்தப் பாரபட்சத்தையும் தங்களை அறியாமலும்கூட வாடிக்கையாளர்களிடம் வெளிப்படுத்தி விடாமல் இருக்க ‘ஸ்டார்பக்ஸ்’ ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கிறார். காவல் துறை தனியே விளக்கம் அளித்திருக்கிறது.

இந்தியாவின் சாதி பேதத்துடன் அமெரிக்காவின் நிற பேதத்தை ஒப்பிடலாம் என்றாலும், பாகுபாட்டுக்கு எதிரான குடிமைச் சமூகத்தின் இப்படியான எதிர்வினைகளையெல்லாம் இங்கே எப்போது பார்க்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. ஜனநாயகம் என்பது இதெல்லாமும்தான். ஆனால், வெறும் தேர்தலை மட்டும், அதிலும் தனிப் பெரும்பான்மையினரின் முடிவுகளை மட்டும் ஜனநாயகமாக நம்முடைய ஜனநாயகத்தைச் சுருக்கிக்கொண்டிருக்கிறோம்.

ஏன் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தியர்கள் போராட வேண்டும்?


கிரெம்ளின் அரண்மனையின் ஆந்திரயேவ் அரங்கில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளம் பழைய சிவப்புக் கொடியைச் சிலருக்கேனும் ஞாபகப்படுத்தியிருக்கலாம். மீண்டும் ரஷ்ய அதிபராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார் விளாடிமிர் புடின். வழக்கமாக ஜெர்மனி தயாரிப்பான ‘மெர்ஸிடிஸ்’ காரில் வலம்வருபவர், இந்த விழாவுக்கு உள்நாட்டுத் தயாரிப்பான ‘நமி - சொல்லர்ஸ்’ லிமோஸில் வந்தது அவர் திட்டமிட்ட விளைவை உண்டாக்கியது. “தேசத்தின் சுயாதீன வளர்ச்சியையும் தேசபக்தியையும் ஒருசேர வெளிப்படுத்தியிருக்கிறார் புடின்” என்று பெரும்பான்மை ஊடகங்கள் எழுதின. கார் ஒரு தேசியவாதக் குறியீடானது.

ஆசியா – ஐரோப்பா இரு கண்டங்களுக்கும் இடையே ஒரு தனி கண்டம் அளவுக்கு விரிந்து பரந்திருக்கும் ரஷ்யாவை சமகால அரசியல் சூழல் சார்ந்து ஆசியாவோடு பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். பரப்பளவில் உலகிலேயே பெரிய நாடான ரஷ்யாவையும், மக்கள்தொகையில் உலகிலேயே பெரிய நாடான சீனாவையும் இணைத்துப் பார்ப்பதன் மூலம் ஆசியாவில் ஜனநாயகத்தின் போக்கை யூகிக்க சில சாத்தியங்கள் தென்படுகின்றன.

விவசாயிகளுக்கான போராட்டங்கள் ஏன் எரிச்சலூட்டுகின்றன?


சென்னை ஸ்ரீனிவாசா திரையரங்கம் செல்லும் வழியிலுள்ள மது விடுதியில் கோபாலசாமி அறிமுகமானார். எழுபது வயதிருக்கும். தலை முழுவதும் நரை. நல்ல தாட்டியமான உடலமைப்பு. குடியர்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தார். வெள்ளைச் சட்டை, மடித்துக் கட்டிய வேட்டி, கண்ணாடி அணிந்திருந்தவர் தன் தோளில் தேங்காய்ப்பூ துண்டைப் போட்டிருந்த விதம் அவரைத் தொடர்ந்து கவனிக்கத் தூண்டியது. சென்னைக்காரர்களின் தோற்றம் அல்ல அது. மெல்ல அவரிடம் பேசலானேன்.

தஞ்சாவூர் பக்கம். விவசாயம் நொடித்ததும், இங்குள்ள சினேகிதர் அழைக்க வந்திருக்கிறார். சினேகிதரும் விவசாயிதான். அவர் இப்போது ஒரு அடுக்ககத்தில் காவலாளியாக இருக்கிறார். கோபாலசாமிக்கு அந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கும் அவருக்கு எந்தச் சம்பளமும் கிடையாது. மது குடிக்க வருபவர்கள் கேட்கும் பண்டங்களை வாங்கி வந்து பரிமாறுகிறார். புறப்படுகையில் அவர்கள் கொடுத்துச் செல்லும் பத்து, இருபது அவருக்கான வரும்படி. ஒரு நாளைக்கு இருநூறு, முந்நூறு கிடைக்கும் என்றார். எங்கே தங்கியிருக்கிறார் என்ற போது பக்கத்திலுள்ள சேரியைச் சுட்டிக்காட்டினார். ஊரில் அவருக்கு நிலம் இருக்கிறது. பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால், யாரும் யாருக்கும் உதவிக்கொள்ளும் சூழலில் இல்லை.

‘‘எங்கப்பாவுக்கு பத்து ஏக்கர் நிலம் இருந்துச்சு. என்னோட அண்ணனுக்கும் எனக்கும் சரிபாதியா பிரிச்சுக் கொடுத்தார். எனக்கு ரெண்டு பிள்ளை, ஒரு மகள். பொண்ணு கல்யாணத்தப்போ ஒரு ஏக்கர் நிலத்தை விக்க வேண்டியதாச்சு. மிச்ச நாலு ஏக்கர் நிலத்தை ரெண்டு மவன்களுக்கும் ஆளுக்கு ரெண்டு ஏக்கரா கொடுத்தேன். அந்த ரெண்டு ஏக்கரா நெலத்துல விளையறது அவனவன் குடும்பத்துக்கே சாப்பாட்டுக்குக் காணாது. ஒரு போக சாகுபடிக்கு ஏக்கருக்கு உழுவுறது தொடங்கி அறுக்குற வரைக்கும் ஆறு ஆளுங்களுக்கு மூணு நாள் வேலை (18 வேலை நாட்கள்). டிராக்டரெல்லாம் வந்த பின்னாடி அதுவும் குறைஞ்சுடுச்சு. வயலுக்குச் சொந்தக்காரன் நெதமும் வயலுக்குப் போய் வந்தாலும் நாலு மாசத்துல நெல்லு விளைஞ்சுரும். விளைஞ்ச நெல்லு சோத்துக்குக் காணும். மிச்சத்துக்கு என்ன பண்ணுவான்? மிச்ச எட்டு மாசம் என்ன வேலைக்குப் போவான்? நம்ம யாருக்கும் சுமையா இருக்கக் கூடாது. இங்கே வந்தாச்சு. கிராமத்துல சேரியை நாம ஒதுக்குனோம். நகரத்துல சேரிதான் நம்மளைச் சேத்துக்குது.’’